Tuesday, 4 June 2013

உருத்திராட்சம் - அறிந்ததும் அறியாதவையும்

உருத்திராட்சம்:
.................................. 















“உருத்திராட்சம்”  என்பது  உருத்திரனாகிய சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றிய நீர் ஆகும்’.


அதாவது, தேவர்கள் அசுரர்களால் வதை படும் துன்பத்தினை தாங்க முடியாமல் உருத்திரனின் கண்களிலிருந்து வடிந்த நீரே  உருத்திராட்சம்” ஆனது.  

இதில் உருத்’ என்பது துக்கம்’ என்றும், ’ரன் என்பது  ஓட்டுபவன்’ என்றும் பொருள்படும்.  உருத்திராட்சம்” என்பது துக்கத்தினை ஓட்டுவது’ அல்லது துக்கத்தை வெளிப்படுத்துவது’ என்று பொருள்.  
இது
  •           சிவநேத்திரம்
  •                   அக்கமணி
  •                   கண்மணி

என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

      ·        சிவநேத்திரம் என்பது சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியதால் இப்பெயர் பெற்றது.

  •  அக்கமணி என்பதுஅண்டசராசரத்தை ஆளும் தலைவனுடைய  கண்களிலிருந்து வந்த மணித்துளி’ என்று பொருள் படும்.

      ·      கண்மணி என்பது 'கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்த்துளி என்று பொருள்படும்.    

                          இந்த மணித்துளி புனித ஆகாய கங்கையை காட்டிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே இதனை அணிந்தவர்கள் புனித ஆகாயகங்கையில் மூழ்கியதை காட்டிலும் அதிக நற்பயன்களை பெறுவார்கள்” என்பது குறிப்பிடத்தக்கது


    • இது ஐயத்தினால் ஏற்படும் மரணத்தினை” தடுக்கும்  காயகற்ப மூலிகை”  ஆகும்.
    • உருத்திராட்சத்தை கொண்டு செய்யப்படும்"உருத்திராட்சக்கருக்கு"  என்னும் மகிமை வாய்ந்த மருந்து 'கப நோய்களை வேருடன் அழிக்கக்கூடிய' ஈசனின் வல்லமைப் பெற்றது.

உருத்திராட்சத்தின் புறத்தோற்றம்:
.........................................................................................

உருத்திராட்சத்திற்கு மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
அவை,

  •      இயற்கையாக அமைந்துள்ள நீண்ட துளை
  •    முகங்கள்
  •      உடல் பகுதி ஒழுங்கற்ற வடிவத்திலும் காணப்படுகிறது.




உருத்திராட்சத்தின் வகைகள்:
..............................................................
  •      உருத்திராட்சத்தின் வகைகளை கூறும் போது அதன் முகங்களின் எண்ணிக்கையை வைத்தே வகைப்படுத்தப்படுகிறது .
  •        இதில் ஒரு முகம் உருத்திராட்சம் முதல் பன்னிரெண்டு முகம் உருத்திராட்சம் வரை உள்ளது.





ஆக்கமும் செயலாக்கமும்,
ஸ்ரீ ஸ்கந்தா சித்த மருத்துவ நிலையம்
சென்னை
தொடர்புகொள்ள
அலைபேசி எண்: +91-9710083268


                                              மீண்டும் வருக!!! வருக!!! வருக!!!






No comments: